“இனமே எழு, உரிமை பெறு” – வன்னியர் என்பதும் ஒரு தேசிய இனம் தான்.
மாமல்லபுரம் மாநாட்டில் அருள் ரத்தினம் அவர்களின் உரை
இனம் என்றால் என்ன?
இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. தமிழ்நாடு அதில் ஒரு தேசிய இனம். தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு துணை தேசிய இனம் வன்னியர்கள்.
தேசிய இனம் என்பதற்கான வரையறை:
1. ஒரு பொதுமொழி, 2. ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு. 3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு. 4. பொதுவான பண்பாடு. 5. ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் – இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் ரீதியான மக்கள் சமுதாயமே தேசம் ஆகும்.
இவை அனைத்தும் வன்னியர்களுக்கு உள்ளது.

வன்னியர்கள் ஒரு மிகப்பெரிய இனம்
யூதர்கள் 1 கோடியே 50 லட்சம் பேர் – உலகின் மிக வலிமையான இனமாக இருக்கிறார்கள். யூதர்களை விட வன்னியர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்திய சீக்கியர்கள் 2 கோடி பேர். இந்தியாவின் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருந்தார்கள். பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ஆள்கிறார்கள். சீக்கியர்களுக்கு இணையான எண்ணிக்கை கொண்டது வன்னியர்களின் மக்கள் தொகை ஆகும்.
உலகின் 200 நாடுகளில் சுமார் 140 நாடுகளின் தனிப்பட்ட மக்கள் தொகை – வன்னியர்கள் மக்கள் தொகையை விட குறைவாகும். (2 கோடி + நாடுகள் = 65)
வன்னியர்களுக்கும் உரிய அதிகாரம் வேண்டும் என்கிற கோரிக்கை 200 ஆண்டுகளாக இருக்கிறது.
1865 அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்
1885 கோபால நாயகர், அண்ணாசாமி நாயகர்
1945 இராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயகர்
1980 மருத்துவர் அய்யா
200 ஆண்டு போராட்டம் இன்னும் 200 ஆண்டுகள் தொடரக் கூடாது.
கல்வி, பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அரசியல் அதிகாரமே அடிப்படை,
வன்னியர்கள் இப்போதே அரசியல் அதிகாரத்தை பிடிக்க வேண்டும்.
மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் அனைத்து வன்னியர்களும் ஓரணியில் திரள வேண்டும்.